இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.04.2026

- புலம்பெயர் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக திறந்தவெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் 5 கிலோ சிலிண்டர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளது.
- கேரளம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று பிற்பகலில் முடிவடைய உள்ளது.
- எரிபொருள் விலையேற்றம் காரணமாக விமான கட்டணத்தை உயர்த்தியது ஏர் இந்தியா. உள்நாட்டு டிக்கெட் கட்டணம் ரூ.299 தில் ரூ.899 வரையும், சர்வதேச கட்டணம் ரூ.2200 முதல் ரூ.26000 வரையும் உயர்கிறது. சர்வதேச கட்டண உயர்வு வரும் 10 தேதியும் உள்நாட்டு கட்டண உயர்வு நாளையும் அமலுக்கு வருகிறது.
- 9ம் தேதி புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு அரசு விடுமறை அறிவித்து உத்தரவு.
- அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தில் கூட்டணி கட்சி போட்டி தடை கோரிய மனு விதிமீறல் இருந்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- மேற்காசிய போர் காரணமாக பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கம் அறிவிப்பு. இதன்படி கடைகள் வணிக வளாகங்கள் இரவு 8 மணியுடன் மூட வேண்டும். ஓட்டல்கள் திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிப்பு.
- கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன PROTOTYPE FAST BREEDER REACTOR –ல் மின் உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு. – இந்தியாவுக்கு இது பெருமைக்குரிய தருணம். – பிரதமர் மோடி வாழ்த்து.
- ட்ரம்பின் 8 மணி கெடு நெருங்கும் வேளையில் 14 மில்லியன் மக்களுடன் இணைந்து தனது உயிரையும் தியாகம் செய்யத் தயார் என ஈரானிய ஜனாதிபதி அறிவித்துள்ளார். அமெரிக்கக் குண்டுவீச்சுகளைத் தடுக்க மின் நிலையங்களைச் சுற்றி பிரம்மாண்டமான மனிதச் சங்கிலியாக நிற்கும்படி இளைஞர்களுக்கு ஈரானிய அரசு விடுத்த பகீர் அழைப்பால் வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.












