இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.03.2026

- பராமரிப்பு பணிகள் காரணமாக குற்றாலம் மெயின் அருவி தற்காலிகமாக மூடப்பட்டது.
- இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு – வாக்காளர்கள் இப்போது 1950 வாக்காளர் உதவி எண் மற்றும் “Book a Call with BLO’ வசதியை பயன்படுத்தி தேர்தல் தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம். இலவச எண் – 1800-11-1950.
- காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம். பிரசாரங்களுக்கான அனுமதி ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும். 5000 நபர்களுக்கு மேல் பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
- உத்தரப்பிரதேசத்தில் மதுபான உற்பத்திக்காக பிரத்யேகமாக நடந்த மெகா முதலீட்டு மாநாட்டில் 200 நிறுவனங்கள் பங்கேற்பு. ரூ.4320 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மது விற்பனை மூலம் 2024-25 ஆண்டில் ரூ.52570 கோடி வரி வருவாயை ஈட்டிய மாநில அரசு இதனை மென்மேலும் அதிகரிக்கும் நோக்கில் இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த கட்டண மாற்றத்தின்படி வாகனங்களின் வகையைப் பொறுத்து 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
- திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை இனி 9552300009 என்ற வாட்சப் எண் மூலம் பக்தர்கள் எளிதாகப் பெறலாம். Hi என அனுப்பி TTD Temple Service மூலம் விரும்பிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்தினால் டிக்கெட் உடனடியாக வாட்சப்பில் வந்தவிடும். இந்த புதிய வசதியால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு உள்ளது.















