இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.03.2026

அணைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யுனிட்டிற்கு ரூ.2. சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை இந்தச் சலகை தொடரும். டீ கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம். மாநிலங்களவை தேர்தல் முடிய வேண்டும் மற்றம் தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டம். அதற்கு பிறகே தேதி அறிவிக்கபட வாய்ப்பு. எனவே தேர்தல் தேதி ஏப்ரல் 18க்குப் பிறகு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய அரசு அறிவிப்பு.
ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.













