இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.03.2026

- சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று நாள் பப்ஸ் மற்றும் முட்டை வழங்கப்படும். – தமிழ்நாடு தங்கும் விடுதி, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளின் நல சங்கம் அறிவிப்பு.
- இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர்கள் கையிருப்பு உள்ள நிலையில் உணவகங்களில் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், கிச்சடி போன்ற உணவுகள் மட்டுமே வழங்க முடியும். தோசை, ஆம்லெட், போண்டா, பஜ்ஜி போன்ற எரிபொருள் அதிகம் பயன்படுத்தப் படும் உணவுகள் கிடையாது. – ஓட்டல் உரிமையாளர்கள்.
- கள்ளக்குறிச்சி ஓட்டல் உரிமையாளர்கள் விறகு அடுப்புக்களை பயன்படுத்தத் தொடங்கினர்.
- இஸ்ரேல் மிகப்பெரிய தவறைச் செய்தது. தெவற்ரானில் உள்ள வடகொரிய தூதரகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் தற்செயலாகத் தாக்கின.
- தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்காக பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்.
- கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன முதலீடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல். விதிகளை தளர்த்தி மின்னணு மற்றும் உற்பத்தித் துறையில் சீன முதலீடுகள் எளிதாக இந்தியாவுக்குள் வர வழிவகை செய்ய முடிவு.
- மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல்.
- நாளை முதல் 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடக்கம். மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். 12467 பள்ளிகளைச் சேர்ந்த 882806 மாணவர்களும் 26196 தனித் தேர்வர்களும் என மொத்தம் 909002 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
- மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக வங்கதேசத்தில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டிற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவ.
- துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!
- தமிழ்நாட்டில் இருந்த 54 மாதங்கள் பொற்கால நாட்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி உருக்கம்.















