Connect with us

உலகம்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதால் எலன் மஸ்கின் சொத்து மதிப்பில் விழுந்த மிகப் பெரிய ஓட்டை!

Published

on

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதால் எலன் மஸ்கின் சொத்து மதிப்பில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலன் மஸ்க், அக்டோபர் 28-ம் தேதி டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

அதனைத் தொடர்ந்து எலன் மஸ்கின் செல்வ மதிப்பு 9 பில்லியன் டாலர் சரிந்து 204 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

2022-ம் ஆண்டிலிருந்து எலன் மஸ்கின் செல்வ மதிப்பு 25 சதவீதம் சரிந்துள்ளது. இருந்தாலும் எலன் மஸ்க் தான் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார்.

உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்ட் அர்னால்ட் செல்வ மதிப்பு 65 பில்லியன் டாலர் ஆகும்.

எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடித்து வாங்கியுள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதைத் தொடர்ந்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தாங்களாகவே ராஜினாமாவும் செய்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் இனி தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், வாரம் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் விடுமுறை கிடையாது என்றும், விருப்பம் இல்லை என்றால் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் டெஸ்லாவிலிருந்து 50 ஊழியர்களை டிவிட்டர் பணியமர்த்தியுள்ளார் எலன் மஸ்க், இவர்கள் மூலம் டிவிட்டரை லாபகரமான, அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதை இலக்காக எலன் மஸ்க் வைத்துள்ளார்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?