Connect with us

இந்தியா

500 ரூபாய் அபராதம் விதித்த ஆய்வாளர்: மொத்த காவல்நிலையத்திற்கும் ஆப்பு வைத்த நபர்!

Published

on

தலைக்கவசம் அணியவில்லை என 500 ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ள காவல் நிலையத்திற்கு ஆப்பு வைத்த நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி என்ற பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மின்வாரிய ஊழியர் ஒருவர் சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

மின்வாரிய ஊழியர் காவல்துறை ஆய்வாளரிடம் எந்தவிதமான வாக்குவாதம் செய்யாமல் 500 ரூபாய் அபராதத் தொகை கட்டிவிட்டு அதன் பின் நேராக சென்று காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மீட்டர் இல்லாமல் திருட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்தே அந்த மின் இணைப்பை துண்டித்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

காவல் நிலையத்தில் மின்சார மீட்டர் இல்லாமல் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்தினர் என்றும் அதற்காக மேலதிகாரிகளிடம் ஆலோசித்தே மின்சாரத்தை துண்டித்து உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து காவல் நிலையம் தற்போது இருட்டில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்று மின்சாரத்தை உபயோகித்தற்காக காவல்நிலையத்திற்கு மின்வாரியம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 500 ரூபாய் அபராதத்தை மின் ஊழியருக்கு விதித்ததன் காரணமாக தற்போது காவல்நிலையம் பெரும் சிக்கலில் உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?