இந்தியா
வாஷிங் மிஷின் பழுதானதால் முதுகுவலி: ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

வாஷிங் மெஷின் பழுதானதன் காரணமாக கையால் துணி ரத்தத்தால் முதுகு வலி ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வாஷிங் மெஷின் நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வாஷிங்மெஷினை பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென வாஷிங் மெஷின் பழுதானது. இதுகுறித்து அந்த பெண் வாஷிங் மெஷின் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து சரி செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் பல நாட்களாகியும் வாஷிங்மெஷினை சரிசெய்ய நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஆட்கள் அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக துணிகளை கையால் துவைத்து வந்ததாகவும் அதன் காரணமாக அந்த பெண்ணுக்கு முதுகு வலி ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பெண்ணின் புகாரில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்தப் பெண்ணுக்கு ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வாஷிங் மெஷின் எலக்ட்ரானிக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் உடனடியாக அந்த பெண்ணின் வாஷிங் மெஷினை சரி செய்து கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















