Connect with us

இந்தியா

ஊழியர்களுக்கு ரூ.15 லட்சம் வரை அபராதம் விதித்த ஏர் இந்தியா… என்ன காரணம்?

Published

on

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போதை பயணி ஒருவர், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த சம்பவத்திற்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் இந்திய விமானத்துறை அபராதம் விதித்தது.

இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா தனது ஊழியர்களுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய அரசிடம் இருந்து விமான நிறுவனத்தை வாங்கும்போது அதன் ஊழியர்களையும் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தது. ஆனால் தங்கும் இடங்கள் உள்பட ஒரு சில சலுகைகள் வழங்கப்படாது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள ஏர் இந்தியா காலனி மற்றும் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கி இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை காலி செய்யாத ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா ஊழியர்கள் தங்களது டிசம்பர் மாத சம்பளத்தில் 15 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை குறைத்து பெறுவார்கள் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இனியும் வீடுகளை காலி செய்யாமல் இருந்தால் வரும் நாட்களில் கூடுதல் தொகை அபராதமாக சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள ஏர் இந்தியா காலனி மற்றும் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மொத்தம் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பளம் உள்பட பிறவற்றிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சேத கட்டணமாக கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என்றும் பொறுப்பு கட்டணம், அபராத வாடகை ஆகியவையும் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஏர் இந்தியா வீடுகளை காலி செய்யாத ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியும், ஊழியர்கள் தொடர்ந்து காலி செய்யாமல் இருப்பதால் அபராதத்துடன் கூடிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாதமும் காலி செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்திருப்பது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?