Connect with us

இந்தியா

இனிமேல் வாக்களிக்க சொந்த ஊர் போக தேவையில்லை.. வருகிறது ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்!

Published

on

வெளியூரில் இருப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊரை நோக்கி செல்ல வேண்டிய நிலை தற்போது உள்ளது. ஆனால் விரைவில் ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இந்த ஓட்டிங் மிஷின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே நாம் நமது சொந்த தொகுதியில் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினை கண்டு பிடித்துள்ள நிலையில் இந்த மெஷின் மூலம் ஓட்டு போடும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தபோது 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது என்றும் 30 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அதற்கு ஒரே காரணம் வாக்களிப்பதற்காக பல கிலோ மீட்டர் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளது.

election இதனையடுத்து வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் நிலைமையை தவிர்ப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லாமல் வாக்களிக்கும் உரிமையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இருக்கும் இடத்திலிருந்தே நமது சொந்த ஊரில் உள்ள வேட்பாளருக்கு வாக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் இது குறித்து செயல் விளக்கம் அளிக்கவும் ஆலோசனை செய்யவும் 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்த தொழில்நுட்ப குழுவினர் பங்கேற்பார்கள் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு அவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வாக்குப்பதிவு முறையில் இருப்பது போலவே வாக்களிப்பில் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், வாக்கு மைய ஏஜென்ட்களுக்கான வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை அமலுக்கு வர வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கூறினாலும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் இந்தமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும் என்றும் எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டிவி8 mins ago

ப்ரீத்தி- கிஷோர் பதிலடி: “வயசு ஒரு விஷயமே இல்லை!

வணிகம்16 mins ago

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு! (24/03/2023)

டிவி27 mins ago

இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா மணிமேகலை?

சினிமா செய்திகள்31 mins ago

அடுத்தடுத்த பட வெளியீடு மூலம் பதிலடி கொடுக்கும் சமந்தா!

சினிமா செய்திகள்38 mins ago

இளையராஜா மட்டமான மனிதர்: ஜேம்ஸ் வசந்தன்

சினிமா2 hours ago

இது டோட்டலா வேற கதை; மிரட்டலாக வெளியான பீட்சா 3 டீசர்!

சினிமா2 hours ago

காஷ்மீருக்கு குட்பை சொல்ல இப்படியொரு வீடியோவா? லியோ படக்குழு இப்படி நெஞ்சை நக்கிட்டாங்களே!

சினிமா3 hours ago

இந்து கடவுளை அவமதித்தாரா வெற்றிமாறன் ஹீரோயின்; திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

சினிமா13 hours ago

’தலைவி’ தோல்வி எதிரொலி: கங்கனாவிடம் ரூ.6 கோடியை திருப்பி கேட்ட தயாரிப்பாளர்..!

இந்தியா13 hours ago

இந்தியாவில் மட்டும் 45,000 வேலைவாய்ப்புகள்: AI தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான எதிர்காலம்..!

பர்சனல் பைனான்ஸ்6 days ago

மாதம் ரூ.1 லட்சம் பென்சன் வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசியை எடுங்கள்..!

வணிகம்7 days ago

மீண்டும் உயரும் தங்கம் விலை (17/03/2023)!

வணிகம்5 days ago

மின்னல் வேகத்தில் இருக்கு இன்று தங்கம் விலை (19/03/2023)!

வணிகம்6 days ago

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை (18/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 5369

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.43,000/- சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. மீண்டும் பிஸியாகும் அலுவலகங்கள்..!

உலகம்6 days ago

கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தி ஹேக்கிங்? வங்கி கணக்கில் நூதன திருட்டு..!

உலகம்4 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

உலகம்4 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?