சினிமா செய்திகள்
அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!
இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கதையில் திருப்தி இல்லாததால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார் எனவும் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார் எனவும் தகவல் வெளியாகியது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் தன்னுடைய மகனுடன் எடுத்தப் புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் அதில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ‘ என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மையே இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் கற்றுத் தருவதை விட அவமானம் மற்றும் தோல்வி நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சீக்கிரமாக அடுத்தப் படம் பற்றி அறிவிக்க இருக்கிறேன். இது போன்ற கடினமான சமயத்தில் எனக்கு துணை இருந்து, என்னை அடுத்த நிலைக்கு நகர்த்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
என் நண்பர்கள், குடும்பம், என் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்து நடிக்க இருக்கிறார் எனது குறிப்பிடத்தக்கது.