இந்தியா
மது பானங்கள் விலையை 70 சதவீதம் வரை உயர்த்தி டெல்லி அரசு அதிரடி!
டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
இந்த விலை ஏற்றமானது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், மது பானங்கள் கடைகளில் அதிகம் கூட்டம் சேருவதால். காலை 9 மணி முதல் 6:30 மணி வரை கடை திறக்கும் நேரத்தை நீட்டியும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மே 7-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழகத்தில் கொரோனா சிறப்பு கட்டணம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி வழங்காமல் இருப்பதன் காரணத்தில் தான் மாநில அரசுகள் இது போன்ற முடிவை எடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
https://seithichurul.com/news/tamilnadu/tasmac-liquor-shops-to-reopen-in-tn-from-may-7/22671/