Connect with us

தமிழ்நாடு

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை: சுப்ரீம் கோர்ட் ஆச்சரிய தீர்ப்பு!

Published

on

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது .

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமி பதினைந்து வயதிலும் 17 வயதிலும் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இதுகுறித்து காவல் துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

காவல்துறையினர் சிறுமியிடம் புகார் பெற்று தண்டபாணி மீது வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு போஸ்கோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தண்டபாணி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

தன்னுடைய மனைவி தன்னை மிகவும் நேசிப்பதாகவும் தனது இரண்டு குழந்தைகளையும் தான் நன்றாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தனக்கு தண்டனை கொடுத்தால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் கஷ்டப் படுவார்கள் என்றும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார் .

இந்த மனுவை விசாரித்த நீதிபதி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது தவறு என்றாலும் தற்போது அந்த சிறுமி 18 வயது ஆகி உள்ளார் என்றும் தண்டபாணியுடன் சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதால் அந்த குடும்பத்தை பிரிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அதனால் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறோம் என்றும் தீர்ப்பளித்தனர் .

ஆனால் அதே நேரத்தில் அந்த பெண்ணை தண்டபாணி சரியாக பார்த்துக் கொள்ளாவிட்டால் இந்த தீர்ப்பு மாறுபடும் என்பதையும் தண்டபாணி ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?