Connect with us

இந்தியா

வாஷிங் மெஷினில் தவறி விழுந்த குழந்தை: 19 நாட்கள் போராட்டத்திற்கு பின் உயிர் பிழைத்த அதிசயம்!

Published

on

தலைநகர் டெல்லியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையானது சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த அந்த குழந்தை 19 நாட்களுக்கு பின்னர் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

#image_title

குழந்தையின் தாய் வாஷிங் மெஷினின் அருகில் இல்லாதபோது அங்கு சென்ற குழந்தை சேரில் ஏறி வாஷிங் மெஷினில் தவறி விழுந்துள்ளது. 15 நிமிடங்கள் சோப்பு தண்ணீர் நிரம்பிய வாஷிங் மெஷினில் மூழ்கி கிடந்த குழந்தையை கண்டுபிடித்த தாய் உடனடியாக மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே குழந்தை சுயநினைவின்றி, பேசமுடியாத நிலையில், மூச்சுத்திணறல் போன்ற சிரமங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தான் இருந்தது.

இதனையடுத்து ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் தான் குழந்தை இருந்து வந்தது. பின்னர் வார்டுக்கு மாற்றப்பட்ட குழந்தையானது தனது தாயின் குரலை உணர்ந்து மீண்டும் பேசியது அதிசயமாக அமைந்தது. இதனையடுத்து 19-வது நாளில் குழந்தை உயிர் பிழைத்ததாக கூறி மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். 19 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பின்னர் குழந்தை உயிர் பிழைத்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?