Connect with us

இந்தியா

இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

Published

on

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் டெல்லி முதல்வர்.

ஆம்ஆத்மி – தேசிய கட்சி

அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், இந்தியாவில், 1,300 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அவற்றில், பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி ஆகிய 3 கட்சிகள் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி செய்து வருகின்றன. 10 ஆண்டுகள் எனும் குறுகிய காலத்திலேயே தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்திருப்பது, அற்புதமான மற்றும் நம்ப முடியாத சாதனையாகும். இதனால், நமக்கு பொறுப்பு மேலும் கூடியிருக்கிறது. இதற்காக பாடுபட்டுள்ள அனைத்து கட்சியினருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

முதன்மை நாடு

இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் அனைத்து தேச விரோத சக்திகளும் ஆம்ஆத்மிக்கு எதிராகத் தான் உள்ளனர். இருப்பினும் கடவுள் நம்முடன் இருக்கிறார். கடவுள், இந்தியாவிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார். இந்தியாவை உலகத்தின் முதன்மை நாடாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஆம்ஆத்மியில் சேர வேண்டும்.

நாட்டுக்காக எனது இரத்தம் சிந்தப்பட்டால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. தேவை ஏற்பட்டால் கட்சியினர் சிறைக்கு செல்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். சிறைக்கு செல்வதைப் பற்றி பயம் கொண்டவர்கள், கட்சியை விட்டு விலகி விடலாம். தீவிர நேர்மை, தேசபக்தி மற்றும் மனிதநேயம் ஆகிய 3 தூண்களின் மீது ஆம்ஆத்மியின் சித்தாந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம்ஆத்மி கட்சி மீதான கோடிக்கணக்கான பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், இப்போது நம்பிக்கையாக மாறிவிட்டது. கடவுள் ஆசியுடன் அதனை நிறைவேற்றுவோம். இந்திய அரசியலில், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வருவதில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. நம்மைப் பார்த்து தான், மற்ற கட்சிகளும் இலவச மின்சாரம் கொடுப்போம் என வாக்குறுதி அளிக்கத் தொடங்கி உள்ளன என அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?