தமிழ்நாடு
ஒரு ஆண்டுக்கு பொதுநலன் வழக்கு தொடர தடை: யாருக்கு தெரியுமா?
சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த ஒருவரை ஒரு ஆண்டுக்கு பொதுநல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடந்த போது இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த மனுதாரர் ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தொடரச் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல பொது நல வழக்குகள் அடிப்படை காரணமே இல்லாமல் பதிவு செய்யப்படுவதாகவும் இதனால் நீதிமன்றத்தின் நேரம் விரயமாகுவதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் கூறியுள்ளன.