தமிழ்நாடு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும்: சட்டசபையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை!

தற்போது இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடி வரும் முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பலமுறை சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில் தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என சட்டசபையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

#image_title
தமிழக சட்டசபையில் விளையாட்டுத் துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற்றது. இதில் பேசிய பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை. தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர்.
எனவே தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.