உலகம்
விவசாயிகள் என்ன பிச்சைக்காரர்களா? பட்ஜெட்டை தாறுமாறாக கிண்டல் செய்த ஜோதிமணி!

டெல்லி: மத்திய பாஜக அரசு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக நினைத்து பட்ஜெட் வெளியிட்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்து ஜோதிமணி கிண்டல் செய்துள்ளார். திமுக எம்.பி கனிமொழியும் இந்த பட்ஜெட்டை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தேர்தலை முன்னிட்டு இதில் நிறைய கவர்ச்சிகரமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தற்போது தலைவர்கள் வரிசையாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். அதில் , 2014ல் மோடி ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளுக்கு உற்பத்தி விலையுடன் கூடுதலாக சேர்த்து 50% ஆதரவு விலையும் அளிப்பதாக கூறினார். ஆனால் அதை தற்போது மொத்தமாக நிறுத்திவிட்டு நான்கு மாதத்திற்கு 2000 ரூபாய் அளிக்கப்படுகிறது. அந்த பழைய வாக்குறுதி என்ன ஆனது, விவசாயிகளை பிச்சைக்காரர்கள் போல நடத்தாதீர்கள், அவர்கள்தான் தேசத்துக்கு உணவளிப்பது என்று ஜோதிமணி கூறியுள்ளார்.



















