சினிமா செய்திகள்
ஆர்.ஆர்.ஆர் நாயகிக்கு கொரோனா பாதிப்பு உறுதி: இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு
பிரபல பாலிவுட் நடிகையும் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தின் நாயகியுமான ஆலியா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நேற்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள குறிப்பு ஒன்றில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும் தான் நலம் பெற பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் ஆலியா பட் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில்தான் அவர் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.