இந்தியா
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்: அதிரடி அறிவிப்பு!
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்பு தமிழகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை என்பதும் அனைத்து மாணவர்களும் பாஸ் என அனைத்து மாநிலங்களின் பள்ளி கல்வித்துறை அறிவித்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஒரு சில மாநிலங்களில் பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படித்து வரும் அனைத்து மாணவர்களும் தேர்வு என்றி பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக 1.66 கோடி மாணவர்கள் தேர்வு இன்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தை அடுத்து தமிழகம் உள்பட வேறு சில மாநிலங்களிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வு இன்றி ஆல்பாஸ் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது