Connect with us

இந்தியா

மும்பைக்கு வருகிறது ‘பேங்க் ஆப் சீனா.. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை குறி வைக்க திட்டம்..?

Published

on

உலகின் நான்காவது பெரிய வங்கியான பேங்க் ஆப் சீனா இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் இதன் மூலம் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக்க முயற்சி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சிலிக்கன் வேலி வங்கி திவால் ஆனதை அடுத்து இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திண்டாட்டத்தில் உள்ளன. இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கவர்ந்து இழுக்க பாங்க் ஆப் சீனா இந்தியாவில் தனது கிளையை தொடங்க இருப்பதாகவும் மும்பையில் இதற்கான இடம் குறித்த ஒப்பந்தமும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மும்பையின் முக்கிய பகுதிகளில் இந்த வங்கி அமைய உள்ளதை அடுத்து இந்த வங்கி ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை குறிவைக்கும் என்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் என்பது மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. எனவேதான் இந்தியாவில் பேங்க் ஆப் சீனா தனது கிளையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளன.

1912 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த வங்கி உலகின் நான்காவது மிகப் பெரிய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. சீன தலைநகர் பீஜிங்கில் இந்த வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது என்பதும் சீன அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவிலுள்ள இந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் தொழில் அதிபர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் பேங்க் ஆப் சீனா எந்த விதமான சலுகைகளை வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?