உலகம்
தடுப்பூசி போட்டதால் ரூ.5.50 கோடி பரிசு பெற்ற இளம்பெண்!
தடுப்பூசி போட்ட இளம் பெண் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5.50 கோடி ரூபாய் பரிசு கிடைத்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மிகப்பெரிய பரிசு ஒன்று காத்திருப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் சமீபத்தில் இந்த குலுக்கள் நடைபெற்றபோது 25 வயது இளம்பெண் ஜோனானே ஜூ என்பவருக்கு 5.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணத்தை வைத்து அவர் உலகம் முழுவதும் தனது குடும்பத்தினருடன் சுற்ற திட்டமிட்டுள்ளதாகவும், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டதால்ல் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு ரூபாய் 5.50 கோடி பரிசு கிடைத்துள்ள தகவல்கள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.