செய்திகள்
ஒரு ஓட்டு கூட வாங்காத அதிமுக வேட்பாளர்… இது என்னடா சோதனை!….
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத வாக்குகளை திமுகவே பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் ஆச்சர்யம் என்னவெனில் அதிமுக கோலோச்சி வந்த பல இடங்களில் திமுக மகத்தான வெற்றிகளை குவித்துள்ளது. கொங்கு மண்டலத்தில் 90 சதவீத வாக்குகளை திமுக பெற்றுள்ளது. கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. அதேபோல், சேலத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி வசிக்கும் நெடுஞ்சாலை நகர் வார்டில் கூட திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் – குச்சனூர் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
அதேபோல், வரலாற்றிலேயே முதல் முறை அதிமுக வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டு கூட பெறாத சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை கரம்பக்குடி பேரூராட்சி 7வது வாரில் அதிமுக சார்பாக இப்ராஹிம் ஷா ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.