தமிழ்நாடு
அபிராமி சிறையில் தற்கொலை முயற்சி!
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமிக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு இரண்டு அழகான குழந்தை உள்ளது. ஆனால் அபிராமி அருகில் உள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் அபிராமிக்கும் அவரது காதல் கணவர் விஜய்க்கும் அடிக்கடி தாகராறு வந்துள்ளது.
இந்நிலையில் தனது கள்ளக்காதலுக்கு தடையாக உள்ள தனது கணவன் மற்றும் குழந்தைகளை தீர்த்துக்கட்ட திட்டம்போட்ட அபிராமி விஷம் வைத்து மூவருக்கும் பால் கொடுத்துள்ளார். ஆனால் அதிலிருந்து கணவர் விஜய் தப்பித்துக்கொள்ள அப்பாவி குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக பலியாகினர்.
இதனையடுத்து அபிராமி தனது கள்ளக்காதலன் சுந்தரமுடன் நாகர்கோவிலுக்கு தப்பியோடினார். அங்கு இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரது நீதிமன்ற காவல் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் உள்ள அபிராமி நேற்று இரவு மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை சக கைதிகள் மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.