Connect with us

தமிழ்நாடு

திடீரென்று ரெட் அலர்ட்; ஆனால் ஒரு சொட்டு மழைகூட இல்லை: அரசியல் செய்கிறதா வானிலை ஆய்வு மையம்!

Published

on

மழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியதையடுத்து இடைத் தேர்தலுக்கான தேதியை தற்போது தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என குற்றம் சாட்டியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திருப்பரங்குன்றம் சென்று செயல்வீரர்கள் கூட்டம், சைக்கிள் பேரணி நடத்திய ஓபிஎஸ், ஈபிஎஸ், மழைக்காலம் காரணமாக இடைத் தேர்தலை தள்ளிவைக்கச் சொல்லி தலைமைச் செயலாளரை விட்டு ஒருபக்கம் கடிதம் எழுதச் சொல்லியுள்ளனர்.

இதே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நவம்பர் மாதக் கடைசியில்தான் நடந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடந்த சமயத்தில் கன்னியாகுமரியை ஓகி புயல் தாக்கியது. இதுவரை தேர்தல் ஆணையத்தை தன்னிச்சையான அமைப்பு என்று நினைத்திருந்தோம். தேர்தல் அறிவிக்காததற்கு ஆணையம் சொல்லும் காரணத்தைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள்.

திடீரென்று ரெட் அலர்ட் என்றார்கள். ஆனால் நேற்று சென்னையில் ஒரு சொட்டு மழைகூட இல்லை. ஆக வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா அல்லது அதிபர் ஆட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை என பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?