இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

- நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 சிறுமிகளிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
- பழம்பெரும் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி காலமானார். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 400 படங்களில் நடித்துள்ளார்.
- சட்டசபையில் அவை குறிப்பிலிருந்து நீக்கியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். – சபாநாயகர்.
- FC ஸ்டிக்கர் ஒட்டிய பிறகு ஆன்லைனில் அப்லோடு செய்ய தேவையில்லை பழைய ஸ்டிக்கர் நன்றாக இருந்தாலே போதும் லாரி உரிமையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி ஏழரை ஆண்டுகள் எப்சி ஸ்டிக்கர் பிரச்சனை முடிவுக்கு வந்தது புதிய ட்ரான்ஸ்போர்ட் கமிஷனர் அதிரடி உத்தரவு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி ஜனராஜ் அறிவிப்பு
- தவெக அரசின் தங்க மோதிரம் திட்டத்திற்கு தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து முழு திட்டத்திற்குமான செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், போக்குவரத்து போன்ற அணைத்து கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 1 பைசா மட்டுமே கோரியதால் L 1 நிறுவனமாக ஜாய் ஆலுக்காஸ் தேர்வு.
- இந்தியாவில் இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு STARLINK இணைய சேவை பெரிதும் உதவியாக இருக்கும். – எலான் மஸ்க்
















