இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

- 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நீட்-ப்ரீ ஆயுர்வேதா ( NEET-PA ) என்ற தேசிய நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தி, அவர்களை மிக இளம் வயதிலேயே போட்டித் தேர்வு மற்றும் பயிற்சி மைய அழுத்தத்திற்குள் தள்ளும் ஒன்றிய அரசின் நடவடிக்கை. ஏழரை ஆண்டுகள் கொண்ட ஆயுர்வேத குருகுலக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தது இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம்.
- சொத்து தகராறில் சகோதரரையும், அவரது மனைவியையும் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
- லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமனம். லஞ்ச ஒழிப்பத்துறை ஐஜி மகேஸ்வரி கூடுதலாக லஞ்ச ஒழிப்பத் துறை இயக்குநர் பொறுப்பையும் கவனிப்பார் என அறிவிப்பு.
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 1.40 ஏக்கர் நிலம், சந்தை மதிப்பில் ரூ.110 கோடி இருந்தபோதும், ரூ.2 கோடிக்கு தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் விதிகள் வகுக்கப்படும். வாக்காளர் மீது செல்வாக்கை செலுத்துவதும் ஒரு வகையில் ஊழல் நடவடிக்கைதான். – உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்.
- தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் முதியவர்கள், கைரேகை தேய்மானம் அடைந்தவர்கள் அல்லது கைரேகை பொருந்தாத பயனாளிகளுக்குப் பொருட்களை தடையின்றி வழங்க, விழித்திரை ஸ்கேனர் (Iris) மூலம் சரிபார்க்கும் வசதியை அரசு கட்டாயமாக்கியுள்ளது. தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் விழித்திரை (Iris) மற்றும் முக அங்கீகார (Facial Authentication) முறைகளைப் பயன்படுத்துவது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
- சிபிஎஸ்இ 10 ம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு 2028-29ம் ஆண்டு கல்வியாண்டு முதல் கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும். அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
- அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண் 9498180936 அறிமுகம். தலைமைச் செயலாளர் சாய்குமார் சுற்றறிக்கை. அணைத்து அரசு துறைகளில் இணையதளத்தில் இந்த வாட்சப் எண் இடம்பெற வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்தில் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.
- பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்ததை ரத்து செய்த்து உயர்நீதிமன்றக் கிளை.















