தமிழ்நாடு
கன்னி ஊஞ்சல் ஆடும் மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர்

மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 10 டன் எடையுள்ள வண்ண மலர்கள் மற்றும் 500 கிலோ பழங்களைக் கொண்டு பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டுவரப்பட்டு அலங்காரத்தில் பயன்படுத்தப்பட்டன.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வுக்கு முன்னதாக நடைபெறும் திருமண சடங்கான கன்னி ஊஞ்சல் ஆடும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் முத்துராமய்யர் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


















