இந்தியா
கேரளாவில் தொடர்ந்து 4வது நாளாக கொரோனா தொற்று 20,000ஐ தாண்டியது – தமிழகத்தை பாதிக்குமா?
கேரள மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் தற்போது சோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 13.61 சதவீதமாக உள்ளது. இன்று மட்டும் அம்மாநிலத்தில் 116 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளார்கள்.
கேரளாவில் மல்லப்புரம், கோழிகோடு, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கொல்லம், ஆலப்புழா, கன்னூர், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 1,000 எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.
கேரளாவிலிருந்து வெளி நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் பணி செய்து வந்தவர்களில் சுமார் 14 லட்சம் பேர் மீண்டும் மாநிலத்துக்குத் திரும்பி உள்ளனர். வேலை வாய்ப்பின்மையே அவர்களின் வருகைக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். கொரோனா தொற்றுடன் இப்படியான வேலைவாய்ப்புப் பிரச்சனையினாலும் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தங்களுக்கு சிறப்பு நிதித் தொகுப்பை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.