இந்தியா
ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்-இல் பணமெடுக்கு குவிந்த கூட்டம்: அதிர்ச்சி காரணம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை நாம் பார்க்க முடியாது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் என்ற பகுதியில் திடீரென ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்மில் மட்டும் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு காரணம் அந்த ஏடிஎம்-ல்500 ரூபாய் எடுத்தால் 2500 ரூபாய் வருகிறது என்ற தகவல் பரவியது தான். நேற்று காலை அந்த ஏடிஎம்மில் வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுத்தபோது அவருக்கு ரு..2500 வந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் வங்கி கணக்கை சோதனை செய்தபோது 500 ரூபாய் மட்டுமே கழிந்து இருந்தது.
இதனை அடுத்து மீண்டும் ஒருமுறை அவர் 500 ரூபாய் எடுத்த முயற்சித்தபோது மீண்டும் ரூ.2500 வந்தது. இந்த செய்தி காட்டுத் தீ போல அந்தப் பகுதியில் பரவிய நிலையில் குறிப்பிட்ட ஏடிஎம்-ஐ நோக்கி பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அந்த ஏடிஎம் சென்று மக்களை அப்புறப்படுத்து ஏடிஎம் மையத்தை மூடினர். அதன்பின் விசாரித்தபோது 100 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டு வைக்கப்பட்டிருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.