செய்திகள்
ஸ்டாலின் – அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபாலபுரத்தில் மொத்த குடும்பமும் மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக உடலில் இருந்த பிரச்சனை கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இரண்டு நாட்களாக அவர் சீரான உடல்நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு இன்னொரு சந்தோசமான செய்தியும் கிடைத்து இருக்கிறது. அதன்படி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் மீண்டும் எப்போதும் போல பேச தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் உள்ள மனஸ்தாபம் குறைந்து இருக்கிறது.
திமுக தலைவரின் உடல்நிலையில் ஏற்பட்ட நலிவும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு சென்றதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் வருத்தத்தில் ஆழ்ந்த மூவரும் மீண்டும் பேச தொடங்கி இருக்கிறார்கள்.
முக்கியமாக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு சென்ற அன்றே ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் பழையபடி பேச தொடங்கி இருக்கிறார்கள். மருத்துவமனையில் மீண்டும் தயாநிதி மாறனுடன் பேசி நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.
இது குடும்பத்தில் மட்டுமில்லாமல் காட்சியிலும் சில மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கோபாலபுரம் பட்சிகள் சொல்கிறது.