Connect with us

செய்திகள்

ஸ்டாலின் – அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

Published

on

ஸ்டாலின் - அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபாலபுரத்தில் மொத்த குடும்பமும் மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக உடலில் இருந்த பிரச்சனை கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இரண்டு நாட்களாக அவர் சீரான உடல்நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு இன்னொரு சந்தோசமான செய்தியும் கிடைத்து இருக்கிறது. அதன்படி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் மீண்டும் எப்போதும் போல பேச தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் உள்ள மனஸ்தாபம் குறைந்து இருக்கிறது.

ஸ்டாலின் - அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

ஸ்டாலின் – அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

திமுக தலைவரின் உடல்நிலையில் ஏற்பட்ட நலிவும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு சென்றதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் வருத்தத்தில் ஆழ்ந்த மூவரும் மீண்டும் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

முக்கியமாக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு சென்ற அன்றே ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் பழையபடி பேச தொடங்கி இருக்கிறார்கள். மருத்துவமனையில் மீண்டும் தயாநிதி மாறனுடன் பேசி நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

இது குடும்பத்தில் மட்டுமில்லாமல் காட்சியிலும் சில மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கோபாலபுரம் பட்சிகள் சொல்கிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?