இந்தியா
நான் ஓய்வு பெறலாமா வேண்டாமா என்பதை என்னுடைய உடல்தான் முடிவு செய்யும் அப்போது பார்க்கலாம் – தல டோனி

சமீப நாட்களாக டோனியால் முன்பு போல் அதிரடியாக விளையாடி சோபிக்க முடியவில்லை. இருந்தாலும் ஓய்வு பெறுவது குறித்து அவர் எந்தவித கருத்தையும் சொல்லாமல்தான் இருந்து வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அவரது ஆட்டத்தைக் காணஅவரது பெற்றோர்கள் வந்திருந்தனர். தனது ஓய்வை டோனி அறிவிப்பார் என்ற வதந்தியை அவரது பயிற்சியாளர் ஸ்டீபன் நிராகரித்தார்.
இந்த நிலையில் டோனி தனது மவுனத்தை கலைத்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்-
நான் இன்னமும் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இப்போது எனக்கு 43 வயதுதான் ஆகிறது. இந்த சீசன் முடிந்த பிறகு ஜுலையில் 44 வயது ஆரம்பிக்க உள்ளது. அதன் பிறகு நான் தொடர்ந்து ஆடுவது குறித்து முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் அவகாசம் இருக்கும். ஆனாலும் என்னுடைய ஓய்வை நான் முடிவு செய்ய மாட்டேன். எனது உடல்தான் முடிவு செய்யும். நம்மால் முடியும் அல்லது முடியாது என்று என்னுடைய உடல்தான் சொல்லும். அப்போது அது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு டோனி கூறினார். 













