சினிமா
தேசிங்கு பெரியசாமியுடன் அடுத்த படத்தில் இணையும் சிலம்பரசன்?

‘பத்துதல’ படத்திற்குப் பிறகு சிலம்பரசனின் அடுத்தப் படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

silambarasan
‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என தனது செகண்ட் இன்னிங்ஸில் நடிகர் சிலம்பரசன் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில், ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் இருக்கக்கூடிய ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ரஹ்மான் இசையமைத்திருக்கக்கூடிய இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டப் பலரும் நடித்திருக்கின்றனர்.
இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் படத்துடைய இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில், ‘பத்துதல’ படத்திற்காக தனது தோற்றத்தை நடிகர் சிம்பு எப்படி மாற்றி இருக்கிறார் என்ற ட்ரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ ஸ்பெஷலாக வெளியிட திட்டம் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் சிம்புவின் அடுத்த படம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இப்போது அவரது அடுத்த படம் குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநரான தேசிங்கு பெரியசாமி உடன் அடுத்த படத்தில் சிம்பு இணைகிறார்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் ஒரு பீரியாட்டிக் ட்ராமாவாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.