ஆரோக்கியம்
நீரிழிவு நோயாளிகள் ஏன் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

சர்க்கரை நோய் என பலராலும் அழைக்கப்படும் நீரிழிவு நோய் ஒரு காலத்தில் நகரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இன்று கிராமப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தரவுகள் கூறுகின்றன.
இந்த நீரிழிவு நோயை உடற்பயிற்சிகள் மூலமாகக் கட்டுக்குள் வைக்க முடியும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி செய்வதால், அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று இங்குப் பார்க்கலாம்.
- 1) இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த மற்றும் ஒழுங்கு படுத்த உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமான ஒன்று.
- 2) உடல் ஆரோக்கியத்தை மேம்படும்.
- 3) இன்சூலின் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைக்க உடற்பயிற்சி உதவும்.
- 4) உங்கள் வலிமையை அதிகரிக்க உதவும்.
- 5) இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
- 6) இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
- 7) இரத்த அழுத்தம் குறையும்.
- 8) உடல் எடையைக் குறைத்துப் பராமரிக்க உதவும்.
- 9) நல்வாழ்வின் உணர்வைத் தரும்.
- 10) மன அழுத்தத்தை நீக்கும்.































