Connect with us

தமிழ்நாடு

டிக்டாக்கை தடை செய்ததே எனக்காகத்தான்: நாம் தமிழர் கட்சியின் சீமான்

Published

on

எனக்காகத்தான் மத்திய அரசு டிக்டாக்கை தடை செய்தது என்றும் வாட்ஸ் அப்பில் பார்வேர்ட் மெசேஜ் ஐந்தாக குறைத்ததும் எனக்காகத்தான் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நடிகரும் இயக்குனருமான சீமான் இதுவரை ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கூட வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் தேர்தலிலும் அவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பதும் அவர் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் செய்தபோது ஆண்டு வருமானத்தை குறைத்து காண்பித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய சீமான் அதன் பின்னர் மீண்டும் சரியான வருமானத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிக் டாக் மற்றும் வாட்ஸ் அப்பிற்கு கட்டுப்பாடு விதித்தது என்னுடைய வளர்ச்சியை தடுக்கவே என்று சீமான் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். டிக்டாக்கில் என்னை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடி பேர்கள் என்றும் என்னுடைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் என்னுடைய வளர்ச்சியை தடுப்பதற்காகவே டிக்டாக் தடை செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் பார்வேர்ட் செய்யும் எண்ணிக்கையை ஐந்தாக குறைத்ததும் என்னுடைய வலிமையை குறைப்பதற்காக தான் என்றும் சீமான் ஆதங்கத்துடன் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?