தமிழ்நாடு
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 19) முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்த பணியின் கீழ், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) வீடு, வீடாகச் சென்று வாக்காளர் அட்டையில் உள்ள பெயர், முகவரி மற்றும் பிற விவரங்களை ஆய்வு செய்து சரிபார்ப்பார்கள்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி அக்டோபர் 18 வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு போன்ற வேலைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
வாக்காளர்கள் அனைவரும் தங்களது விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.























