Connect with us

சினிமா

விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு விரைவில் நிறைவு

Published

on

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘தங்கலான்’. கே ஜி எஃப் களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. தற்பொழுது, கர்நாடகாவில் உள்ள கே ஜி எஃப் பகுதியில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.

தற்பொழுது கேஜிஎஃப் களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் மூணு வாரங்களுக்குள் அதாவது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடைய இருக்கிறது. இதன் பின்பு, அடுத்து ஒரு 15 நாட்களுக்கான ஷெட்யூல் இருக்கிறது. இந்த 15 நாட்களில் 10 நாட்கள் சென்னையிலும் 5 நாட்கள் மதுரையிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கடுத்து மொத்தமாகவே ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்காக தன்னுடைய தோற்றம் உடலமைப்பு என மொத்தமாக மாற்றியுள்ளார் நடிகர் விக்ரம். மேலும், இந்த படத்திற்காக சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளில் தீவிரமாக மாளவிகா மோகனன் ஈடுபட்டு வருவதையும் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?