தமிழ்நாடு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தனை புறக்கணித்த வைகோ: என்ன காரணம்?
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திடீரென வைகோ புறக்கணித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் கருத்தரங்கு தி நகரில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு செய்திருக்கும் இந்த கருத்தரங்கில் காசி ஆனந்தன், பழநெடுமாறன், முன்னாள் மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் அதிமுக திமுக பிரமுகர்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந் நிலையில் இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வார் எஅ அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை எப்படி அழைக்கலாம் என கேள்வி எழுப்பிய வைகோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
7 தமிழர் விடுதலையை எதிர்க்கும் பாஜகவை எப்படி அழைக்கலாம் என்று வைகோ தரப்பிலிருந்து கூறப்படும் நிலையில் 7 தமிழர்களை விடுதலையை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியை ஏன் வைகோ எதிர்க்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அண்ணாமலை கலந்து கொள்ளும் காரணமாக திமுகவும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.