தமிழ்நாடு
3 அமைச்சர்களின் துறை நிர்வாகம் திடீர் மாற்றம்: முதல்வர் அதிரடி உத்தரவு
3 தமிழக அமைச்சர்களின் நிர்வாகம் திடீர் என மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் திடீர் திடீரென மாற்றப்பட்டுவதும், அவர்களது துறை நிர்வாகங்கள் மாற்றப்படுவதுமான காட்சிகள் அதிகம் நடக்கும்.
ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அமைச்சர்கள் மாற்றம் என்பது மிகவும் அரிதாகவே நடந்தது என்பதும் அவர்களது துறை மாற்றம் கூட கிட்டதட்ட நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்று எட்டு மாதத்தில் திடீரென தற்போது மூன்று அமைச்சர்களின் துறை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழில்துறை வசமிருந்த சர்க்கரை ஆலை நிர்வாக பிரிவு வேளாண் துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை வசம் இருந்த விமான நிலைய நிர்வாகம் தொழில் துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தொழிலாளர் நலத் துறை வசம் இருந்த வெளிநாட்டு மனித வள கழக நிர்வாகம் சிறுபான்மை துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்வாக மாற்றம் தமிழக அரசு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.