இந்தியா
வளைகுடா போரால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை – பெட்ரோலிய அமைச்சகம்.

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகர்த்து 100 டாலர்களாகவும் வாய்ப்பிருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை அபரிமிதமாக உயரும் பட்சத்தில் மட்டுமே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்போதைக்கு இந்தியாவில் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய தேவையில் 88 சதவீத கச்சா எண்ணையை இந்தியா இதுவரை இறக்குமதி செய்தே வருகிறது. போர் காரணமாக வேறார்முஸ் நீரிணையை ஈரான் மூடி உள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், எல்பிஜி கேஸ் விநியோகம் ஆகியவை குறித்து அமைச்சக மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பெட்ரோலிய துறை அமைச்சர் வறர்தீப்சிங்புரி ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுதும் பெட்ரோலிய பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு உரிய அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.














