Connect with us

இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை என கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு

Published

on

ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் சமூக வலைதள பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் தேவையான ஆக்சிஜன் இருப்பதாகவும் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்துள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு 9,000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் எனவே இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் அவ்வாறு மீறி நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காவல்துறை அதிகாரிகள் மீது தொடரப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது இந்தியாவில் ஆக்சிஜன் தயாரிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் ஆனால் தயாரித்த ஆக்சிஜனை உடனே பயன்படுத்த வேண்டும் என்பதால் தேவையான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?