தமிழ்நாடு
தமிழ் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது: குவியும் வாழ்த்துக்கள்!
பிரபல தமிழ் எழுத்தாளருக்கு இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கடந்த 1054 ஆம் ஆண்டு இந்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட சாகித்ய அகாடமி என்ற அமைப்பு இலக்கியம், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது.
இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை தேடி கண்டுபிடித்து எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகடமி விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பை என்று கூறப்படும் சிஎஸ் லட்சுமி அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய ’சிகப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் முருகேசன் என்பவருக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த இரண்டு தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.