வணிகம்
புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் வணிகளை விரிவுபடுத்தவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் தங்கள் சொந்த “உலக திறன் மையங்கள்” (Global Capability Centers – GCC) எனப்படும் மையங்களை அமைத்து வருகின்றன. இதில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், இந்தியாவிலேயே உலக திறன் மையங்களுக்கான முதன்மை மையமாக தமிழ்நாடு வேகமாக உருவாகி வருகிறது.
தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டமிடல் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகளின் பலனாக கடந்த மூன்று ஆண்டுகளில் 40 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் ஜி.சி.சி.க்களை அமைத்துள்ளன. இதன் மூலம், 50,000-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரம் இன்று அஸ்ட்ரா ஜெனெகா, ஃபைசர், உலக வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, ஹிடாச்சி எனர்ஜி, ரெனால்ட் நிசான் போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் மிகப்பெரிய உலக திறன் மையங்களைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் புதுமை சூழலுக்கான சான்றாகும்.
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள், “தமிழ்நாடு இன்று புதுமைக்கான தேர்வு செய்யும் இடமாக மாறியுள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்தத் தகவல் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கும், புதுமைத் துறைக்கும் நம்பிக்கையளிக்கும் செய்தியாகும். எதிர்காலத்தில் மேலும் பல உலக திறன் மையங்கள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்து இங்கு தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது நிச்சயம்.






















