Connect with us

இந்தியா

மேகலாயாவில் தமிழக இளம் டென்னிஸ் வீரர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Published

on

மேகாலயா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன். 18 வயதான இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

அவர் சென்ற கார் திடீரென எதிரே வந்த லாரியுடன் மோதியதையடுத்து சம்பவ இடத்திலேயே தீனதயாளன் மற்றும் அந்த காரின் டிரைவர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீனதயாளன் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவருடைய உடலை சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தனர். விமானம் மூலம் இன்று காலை தீனதயாளன் உடல் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் தொடங்க இருந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தீனதயாளன் மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளதோடு அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?