Connect with us

இந்தியா

இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் மரணம்.. மர்ம மரணம் என வழக்குப்பதிவு..!

Published

on

By

தனது சகாக்களுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப்பணி துறையில் செயலாளராக பணிகள் இருப்பவர் 57 வயது ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் தத்தாத்ரே. இவர் மும்பை சிஸ்டியில் உள்ள கலா கோடா என்ற பகுதியில் வசித்து வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள உணவகத்திற்கு தனது இரண்டு சகாக்களுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் தத்தாத்தரே தனது சக ஊழியர்களுடன் வெளியே சென்றதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்தது.

முதலில் அவர் இரண்டு சகாக்களுடன் பேட்மிட்டன் விளையாட சென்றார் என்றும் அதன் பிறகு அவர் தனது குடியிருப்புக்கு வந்து தனது துறையின் செயலர் மற்றும் துணைச் செயலாளர் ஆகிய இருவருடன் இரவு உணவிற்காக வெளியே சென்றார் என்றும் கூறப்படுகிறது.

உணவகத்தின் சிசிடிவி கட்சியின்படி மூவரும் 7.55 மணிக்கு உணவகத்திற்கு சென்று உள்ளனர். அதன் பிறகு அவர்கள் 8.52 மணிக்கு உணவு சாப்பிட்டு முடித்த நிலையில் திடீரென பிரசாந்த் தத்தாத்ரே மயக்கம் அடைந்துள்ளதாக அந்த சிசிடிவி கட்சியின் மூலம் தெரிய வருகிறது. அவருடன் சென்ற இரண்டு சக ஊழியர்கள் உடனடியாக டாக்ஸியில் மும்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவருடைய மரணத்தை மர்மமான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும் அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் மறைந்த பிரசாந்த் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவரது இறுதிச் சடங்கிற்காக விமான மூலம் நாக்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சினிமா8 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு9 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா9 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா9 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்9 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

இந்தியா10 hours ago

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

சினிமா செய்திகள்11 hours ago

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சினிமா செய்திகள்11 hours ago

இளையராஜா இசையில் பாட மறுத்தத வானி ஸ்ரீ.. யார் இவர்?

தமிழ்நாடு12 hours ago

மாறி மாறி வாழ்த்து வருதே.. புரியலையே.. எடப்பாடி வென்றதும் அடுத்தடுத்து வந்த திருமா + ராமதாஸ்

தமிழ்நாடு12 hours ago

ஆரம்பமே சிங்கப்பாதை.. பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி போட்ட பரபர ஆர்டர்!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+