இந்தியா
அசானி புயலால் கரையில் ஒதுங்கிய தங்கத்தேர்: ஆச்சரியத்தில் பொதுமக்கள்
அசானி புயல் காரணமாக கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று மிதந்து வந்தது பொதுமக்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
வங்க கடலில் அசானி புயல் காரணமாக கடல் அலைகள் கொந்தளித்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியின் கடலில் தங்கமுலாம் பூசப்பட்ட தேர் ஒன்று மிதந்து வந்தது .
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்து அந்த தேரை கரைக்கு இழுத்து வந்து பார்த்தபோது அதன் சிறிய கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அரசு அதிகாரிகள் அந்த தேரை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த தேர் தாய்லாந்து மியான்மர் ஆகிய நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் அசானி புயல் காரணமாக கடலுக்குள் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தேரை பொதுமக்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.