Connect with us

சினிமா செய்திகள்

எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணம் சர்ச்சை.. பேஸ்புக்கில் வீடியோ போட்ட சரண்!

Published

on

எஸ்பிபி மருத்துவக் கட்டணம் குறித்து இணையத்தில் வெளியான சர்ச்சை தகவல் குறித்து, எஸ்பிபி மகன் சரண் பேஸ்புக்கில் காட்டமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், காந்த ஆகஸ்ட் 5-ம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எஸ்பிபி உடல் நலம் எப்படி உள்ளது என்று அவ்வப்போது சரண் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்துவந்தார்.

உடல் நலம் மோசம் அடைந்த போது திரைத்துறையினர், எஸ்பிபி ரசிகர்கள் என அனைவரும், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டனர். பின்னர் எஸ்பிபி உடல் நிலை சீரானதாகவும், அவரே கட்டை விரலைத் தூக்கிக் காட்டுவதும் போன்ற வீடியோ, புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.

ஆனால், ஒன்றை மாதம் தொடர் சிகிச்சைக்குப் பிறகு, செப்டம்பர் 24-ம் தேதி எஸ்பிபி பிற்பகல் ஒரு மணியளவில் எஸ்பிபி காலமானார். இந்நிலையில் எஸ்பிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அதற்கான கட்டணத்தை, அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாமல் போனது. எனவே தமிழக அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் மறுக்கக் குடியரசுத் தலைவர் எஸ்பிபி மருத்துவ கட்டணத்தைச் செலுத்த உதவியதாகவும், அதுவரை எஸ்பிபியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் அளிக்க மறுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் அந்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த எஸ்.பி.பி.சரண், “எம்ஜிஎம் மருத்துவமனை குறித்தும், என் அப்பா சிகிச்சைக் கட்டணம் குறித்தும் சில வதந்திகள் உலாவுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே சில விசயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அப்பா ஆகஸ்ட் 5-ம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மொத்தமாக எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட்டது என்று வதந்தி ஒன்று உலாவி வருகிறது. நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும், ஆனால் பணம் பாக்கி இருந்ததாகவும், பின்னர் தமிழக அரசிடம் அதற்காக உதவி கோரியதாகவும், அவர்கள் மறுத்ததால் குடியரசுத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும், அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டதாகவும் செய்தி உலாவுகிறது. மேலும் நாங்கள் பாக்கி பணத்தைச் செலுத்தும் வரை எம்ஜிஎம் மருத்துவமனை எஸ்பிபி உடலை அளிக்க மறுத்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

எனவே இப்போது ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவை அனைத்தும் சுத்தப் பொய். ஏன் இப்படி செய்தி பரப்புகிறார்கள் என தெரியவில்லை. சம்மந்தப்பட்டவர்களை இது எப்படி பாதிக்கும் என்று புரியாமல் செய்துகொண்டு உள்ளார்கள். இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது. இப்படி வதந்திகளைப் பரப்பியவர்கள் எஸ்பிபி ரசிகர்களாக இருக்க முடியாது. அவரது ரசிகர்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள். மற்றவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். இதுபோன்ற வதந்திகளை எஸ்பிபி மன்னிப்பார். நானும் மன்னிக்கிறேன். ஆனால் இதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்தவர் முதிர்ச்சியடைய வேண்டும். ஆதாரமில்லாமல் இப்படியான வதந்திகளைப் பரப்பக்கூடாது.

என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எவ்வளவு கட்டணம் என்று எதுவும் அவருக்குத் திரியாது. நான் இப்போது அதுபற்றி சொல்லப்போவதில்லை. எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகமும் நானும் இணைந்து கட்டணம் குறித்து விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடுவோம். இது தேவையில்லாத ஒன்று. ஆனால் இதை நாங்கள் செய்ய வேண்டி உள்ளது. எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டு இருக்கும் மனவலிக்கு நடுவில் உடனடியாக, பத்திரிக்கையாளர்களை ஒன்று கூட்டிப் பேசுவதெல்லாம் எப்படி முடியும்.

மருத்துவமனையில் அப்பாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்களுடனான சந்திப்புகள் மனதில் நினைவலைகளாக உள்ளன. சிகிச்சையின் போது அப்பலோ மருத்துவமனையிலிருந்து கருவி தேவைப்படும் போது, அவர்கள் அதை அளித்து உதவினார்கள். அனைவரும் சிறந்தவர்கள். இந்த செய்தியைப் பரப்பியவரும் சிறந்தவராக மாற வேண்டும். விரைவில் மருத்துவ கட்டணம் குறித்த அறிக்கையை வெளியிடுவேன்.” என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்பு: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

வணிகம்3 மணி நேரங்கள் ago

AI, Space Tech பங்குகளில் சரிவு: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்7 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்7 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா7 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா7 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா7 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.