கிரிக்கெட்
இந்திய அணி மீண்டும் தோல்வி: சொதப்பிய பேட்ஸ்மேன்கள் & பௌலர்கள்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று கட்டாக் நகரில் நடந்த 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் 40 ரன்களும், இஷான் கிஷான் 34 ரன்களும், தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்தனர், அதன் பின் மற்றா பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து 149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியின்ஹெண்ட்ரிச் கிளாசன் அபாரமாக விளையாடி 81 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அந்த அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.