Connect with us

சினிமா

SK22: சாய்பல்லவியுடன் நடனம் ஆடுகிறேனா?

Published

on

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து சாய்பல்லவியுடன் நடிக்கும் படத்தில் அவருடன் நடனம் ஆடுவது குறித்து தெரிவித்துள்ளார்.

’பிரின்ஸ்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் மடோனா இயக்கத்தில் ‘மாவீரன்’ படம் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து, கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் முதல் முறையாக சாய்பல்லவியுடன் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படம் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கக்கூடிய நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இந்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘என்னுடைய அடுத்தப் படத்தில் சாய்பல்லவிதான் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடனம் ஆடும்படி ஒரு பாடல் கூட இல்லை’ எனக் கூறியுள்ளார்.

சாய்ப்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயனின் நடனத்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தில் இருவரும் இணைந்து ஆடும்படி ஒரு பாடல் கூட இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதையோடு இல்லை என்றாலும் படத்தின் புரோமோஷனுக்காகவது இருவரும் ஆடும்படியான ஒரு பாடலை வைக்க வேண்டும் என ரசிகர்கள் இப்போதே வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?