Connect with us

சினிமா செய்திகள்

ரூ.4 கோடி சம்பள பாக்கி: சிம்பு, விக்ரம் படங்களுக்கு எதிராக சிவகார்த்திகேயன் வழக்கு!

Published

on

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு நான்கு கோடி ரூபாய் சம்பள பாக்கி தர வேண்டி இருப்பதால் அவர் வினியோகம் செய்யும் விக்ரம் மற்றும் சிம்பு படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு பதிவு செய்துள்ளார் .

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’மிஸ்டர் லோக்கல்’. இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக ரூபாய் 15 கோடி பேசப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு 11 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்ததாகவும் நான்கு கோடி ரூபாய் சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த சம்பள பாக்கியை சிவகார்த்திகேயன் பலமுறை தயாரிப்பாளரிடம் கேட்டபோது அவர் தராததால் தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தனக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை பெற்று தரும்படி சிவகார்த்திகேயன் பதிவு செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 31ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விநியோகம் செய்யும் சிம்பு மற்றும் விக்ரம் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளதால் மார்ச் 31-ஆம் தேதி விசாரணையின் போது இது குறித்த உத்தரவு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?