இந்தியா
மீண்டும் 1700 புள்ளிகள் சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதன் காரணமாக பெரும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்து உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய உடன் 1700 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சென்செக்ஸ் புள்ளிகள் சுமார் 62 ஆயிரம் என இருந்த நிலையில் தற்போது 52 ஆயிரம் என்ற நிலையில் வர்த்தகம் ஆகி வருவது பங்குசந்தையில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சோதனை காலமாக கருதப்படுகிறது
இன்று சுமார் 1700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 52 ஆயிரத்து 500 என்ற அளவில் சென்செக்ஸ் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை சுமார் 500 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 750 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பல மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது